ஞாயிறு, 29 டிசம்பர், 2024

                                    2025பதிய வருடத்திற்கான நற்செய்தி....

----------------
உலகில் நிம்மதியாக வாழும் மக்கள் நிங்கள் என்றால் இதை படிக்க தேவையில்லை.
---------
புதிய வருடத்திலாவது ஒரு விடுதலையை கர்த்தர் கொடுத்தால் நன்றாக இருக்குமே என எண்ணும் யாராக இருந்தாலும் இதை படியுங்கள்.

ஒரு வேளை இதன் மூலமாக ஆறுதலை பெற வாய்ப்பு இருக்கிறது.
ஒருவருக்கொருவர் ஆறுதலான வார்த்தைகளை பரிமாறிக்கொள்வது நல்லதுதான்.
--------------------------------------------------------------------------
1தெச-5:11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

நமக்கான அடிமைத்தனமும் துயரமும் சமாதான குறைவும் வருவது அனேகமாக நமது கடந்த கால வாழ்க்கையின் பிரதி பலனாகவே இருக்கலாம்.

சில நேரம் நமக்கு எந்த தொடர்பும் இல்லாத பிரச்சனையில கூட நாம் சிக்கி தவிக்கலாம்.
நோய்களின் துயரமும் அப்படியே..

எது எப்படி இருந்தாலும் இன்று விடுதலை தருவது கர்த்தரின் கரத்தில் இருக்கிறது என்பது நூறு சதவீதம் உண்மை.

இஸ்ரேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக மாற்றப்பட்டபின் விடுதலைக்காக ஏங்கினார்கள். ஆனால் ஒரு காரியத்திற்காக அவர்களின் விடுதலைப் பயணம் தடைபட்டுக் கொண்டே இருந்தது ஒரு குறிப்பிட்ட நாளில் விடுதலை பயணம் துவங்கியது..

யாத்திராகமம்12;:;7. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
-----------------------------------------------------------------------
புதிய வருடம் பிறக்கப் போகிறது. நிச்சயமாக விடுதலையடைவீர்கள். ஆனால் அதற்கான ஆயத்தமான ஆட்டுக் குட்டியின் இரத்தம் உங்கள் வீட்டு நிலைக்கால்களில் பூசப்பட்டிருக்க வேண்டும் என்பது முதல் விதியாக இருக்கிறது.
-------------------------------------------------------------------------------
2கொரி-3:17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து அவர் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பின் நிச்சயம் உள்ளவர்களாக மாற வேண்டும் என்பது தேவ சித்தமாக இருக்கிறது..

புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
ஆகையால்இ நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியேஇ புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்லஇ துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் (1 கொரி.5:7-8).
-----------------
கசப்பு என்பது மரணத்தையும் பாவத்தையும் குறிக்கிறது…

வாழ்க்கையில் கிறிஸ்துவால் மீட்பை அல்லது விடுதலையை பெற கிறிஸ்துவின் பாடு மரணங்களை நினைத்து நமது கசப்பான பாவ வாழ்க்கை நினைப்து அவசியமாக இருக்கிறது.
யாத்திராகமம்12:41

நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.

கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்த ஜனம் விடுதலை பயணத்தில் புறப்பட்டது.

உண்மையாகவே இப்படி நடக்கத்தான் செய்யும்…

நமது சத்தம் தேவ சமுகத்தில் நிச்சயம் கேட்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் அதற்கான வேளை வரும் வரை பொறுமையோடு காத்திருக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது..
சரி புறப்பட்டுவிட்டோம்..
இனி நாம் வழி நடக்கும் இடமோ வனாந்திரம். மொத்த ஜனமோ பல லட்சம்.
. ----
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.
------
விடுதலை கிடைத்த பின் நமக்கு ஏற்படும் கவலை இதுதான்..
.இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். முதலாவது பகலில் வெயில் தாக்கம் ஏற்படாதவாறு உங்களை பாதுகாக்க மேக ஸ்தம்பமும் இரவில் வெளிச்சத்திற்காக அக்கினி ஸ்தம்பமும் ஏற்பாடு செய்த தேவன் உங்களுக்கான மன்னாவை தரவும் ஆயத்தமாக இருக்கிறார்..

கன்மலையாகிய கிறிஸ்துவில் இருந்து தண்ணீரை குடிப்பீர்கள்.
--
இது நடைமுறை வாழ்க்கையில் அதிசயமானது..
இந்த வாழ்க்கையை பூமியில் கோடிக்கணக்கானோர் வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் முதல் நபர் அல்ல..

இப்படி நடப்பதற்கு வாய்பபே இல்லை என்பது விஞ்ஞானம், அதை நடத்திக் காட்டுவது விசுவாசம்..

தங்கள் வாழ்க்கை தங்கள் முடிவு என எண்ணினால் அந்த முடிவுக்கு கர்த்தர் காரணம் அல்ல.

என் வாழ்க்கை கர்த்தரின் கரத்தில் என எண்ணினால் எல்லா நாளும் சுகமான நாளே..
எதிர்வரும் நாட்களில் என்வெல்லாமே நடக்குமோ நாம் அறியோம்.
எல்லாவற்றிலும் நாம் செய்யக் கூடிய ஒரு விண்ணப்பம் .
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,

எப்போதும் நான் வீராதி வீரன், சூராதி சூரன் என மார்தட்டாமல் ஆண்டவரே என் பெலவீனத்தில் உமது பெலன் தாங்க வேண்டுமே என வேண்டுவோமாக.
நிச்சயமாக

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர் நமது வாழ் நாள் முழுவதும் நம்மை தாங்குவார்.
கவலைபடவேண்டாம் புதிய வருடத்தை கர்த்தரின் கரத்தினில் எதிர்பார்ப்போம்.
நலமாக வாழ வழி செய்வார் ஆமென்



செவ்வாய், 24 டிசம்பர், 2024

 




கிறிஸ்து பிறப்பை பற்றிய எனது இரண்டாவது செய்தி(2024)
---------------------------------------------------------------------------------------------------------
லூக்கா 2:10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
கிறிஸ்து பிறப்பை பற்றி மேய்ப்பர்களுக்கு தூதனால் சொல்லப்பட்ட செய்தி இதுதான்.. சரி இதை மேய்ப்பர்கள் எப்படி புரிந்து கொண்டனர்.?
-------------------------------------------------------------------------------------------
லூக்கா2:. 16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். 17கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

அவைகளைக் குறித்து…
.
.எவைகளை குறித்து .?அதாவது தூதன் வந்தது.
செய்தி சொன்னது.
அந்த செய்தியில் “இரட்சகர்” என்று குறிப்பிபடப்பட்டது..

தூதன் சொன்னது போல மேய்ப்பர்கள் சென்று கிறிஸ்துவை கண்டது…
இதை ஒரு கோர்வையாக சொல்லப்பட்ட போது ஆடே..அப்படியா.? ஆச்சரியமா இருக்கே என்று வியந்துவிட்டு மற்றவர்கள் கடந்து சென்று விட்டார்கள்..

நாமும் கூட கிறிஸ்து பிறப்பு நாளில் ஆலயத்தில் போதகர் பிரசங்கம் பண்ணும் போது
…எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்… என்று தூதனால் சொல்லப்பட்டது என்று சொல்லும் போது..பிரசங்கியார் தனது முகத்தை மலர்ந்த விதமாக வைத்திருப்பார்…

நாமும்; சிரித்த வண்ணமாக முகத்தை வைத்துக் கொள்ளபிரயாசப்படுவோம்…

பரலோகத்தை பற்றி பிரசங்கம் செய்யும் போதும் முகத்தை மலர்ந்த விதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இது எழுதப்படாது சட்டம்..
உண்மையில் பரலோகத்ததை பற்றி நமக்கு எதுவும் தெரியாது..
----------------------------------------------------------------------------------------------
யோவான் 3:12. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
------------------------------------------------------------------------------
நாமே ஏதோ கற்பனையில் உதித்ததை வைத்து மகிழ்ச்சியடைகிறோம்…

தங்கத்தாலான சாலைகள்….
பளிங்கு நதிகள..
ஜீவ விருட்சத்தின் கனிகள் நிறைந்த மரங்கள்.
அப்புறமா எப்போதும் பாடல்கள்….

இப்படி நாம் கேள்விப்பட்டதை வைத்து எல்லாம் புரிந்தது போல ஒரு பாவனை செய்து கொள்வோம் . அவ்வளவே

பளிங்கு நதியில் அந்த கல்லில் போய் மோதினால் மண்டை என்னவாகும்..
பசியே இல்லாத ஓரு நாட்டில் கனிகள் இருந்து என்ன இல்லாமல் போனால் என்ன.?
இப்படி எல்லாம் யோசிக்கிறதே பாவமாச்சுதே..என்பார்கள்..

இயேசு பரலோகத்தை பற்றி என்ன சொன்னார் என்று கவனித்தால்..நாம் கணித்து வைத்திருக்கும் பரலோகத்திற்கும் உண்மை பரலோகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது..

சரி…எப்படியோ நாம் மகிழ்ச்சியாக இருக்க ஒரு காரணம் நமது அறிவுக்கு எட்டியபடி சிந்தித்து மகிழ்சியாயிருக்க வேண்டியது தான்..

சிறுவர்களுக்கு பரலோகத்தை பற்றிய ஒரு பாட்டு

-
ஓர் வெண்ணங்கி
ஓர் பொண்முடி
ஓர் வாத்தியம்
ஒரு மேல் வீடு
ஓயா இன்பம்
எனக்குண்டு மோட்சத்தில்…..மோட்சம் இவ்வளவுதான் ..
( இது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்றால் அது நல்லதே )

இதைப் போலவே மேப்பர்களுக்கு சொல்லப்பட்ட செய்தியில் ஒரு பகுதி….
எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை..
அதாவது இந்த செய்தி கேட்ட எல்லோருக்கும் அது மகிழ்ச்சியை அளிக்குமாம்….உண்மையில் அப்படி நடந்ததா..? என்பதே எனது கேள்வி.
-
கிறிஸ்து பிறப்பை பற்றிய முதல் செய்தி மரியாளுக்கு கிடைத்து. அந்த தாய் மகிழ்ந்தார்களா..?

லூக்கா 1:29. அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால்.. கலங்கி,… இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.



--------------------------------------------------------------------------------------------------
இயேசுவின் தகப்பனாகிய யோசேப்பின் நிலையைப்பாருங்கள்
மத்தேயு 1:18. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

அடுத்து
இயேசுவைக் காண வந்த சாஸ்திரிகள் நிலையோ படுமோசமாக இருந்தது..
மத்தேயு 2:12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

சாஸ்திரிகள் திரும்பி escape அகி போகும்போது மட்டும் ஏரோதின் கையில் அகப்பட்டிருந்தால் அவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.
நாம் பேச்சி வழக்கில் சொல்வோமே….
..சாஸ்திரிகளின் தோலை உரித்து தொங்கவிட்டிருப்பான்…
-
எப்படியோ தப்பித்துவிட்டார்கள்…நல்லது ..

ஆக மரியளின் சந்தேஷம் எப்படி இருந்தது என விளங்கவில்லை..
இது சிலுவை மரம் வரை தொடர்ந்தது..
மௌனமாகவே காலத்தை கடந்து முடித்தார்கள்.

யோசேப்பின் நிலமை படுமோசம்..அவன் நல்ல மனிதன்..நீதிமான்..

ஏரோதின் நிலையோ பயங்கரம்.
பல ஆயிரம் குழந்தைகளின் உயிரை பறித்த கொலைகாரனாகிவிட்டான்..

ஆனால் மேய்ப்பர்களுக்கு மட்டும் மகிழ்ச்சியை அளித்தது. அவர்களால் சொல்லபட்ட செய்தியை கேட்வர்களும் மகிழ்ந்தார்கள்..இது உண்மை
-
சில காரியங்கள் கர்த்தரால் வெளிப்படுத்தப்படும் போது எல்லோராலும் அதை வெளியே சொல்ல முடிவதில்லை..

உதாரணமாக சாமுவேலிடம் கர்த்தர் பேசியதை ஏலியிடம் சாமுவேல் சொன்னான்.ஆனால் ஏலி அதை யாருக்கும் சொல்ல முடியவில்லை..

ஒரு செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக விளங்கிக் கொள்கிறார்கள்…இங்கே நான் சொல்லப்போவதும் அதுதான் ..

….எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி..

எல்லா ஜனம் என்றால் அது பூமியில் எல்லோருக்குமா?..அந்த எல்லோர் என்ற கூட்டத்தார் யார்.? என்பதே என் கேள்வி..

பூமியில் உள்ள அனைவருக்கும் என்றால் இந்தியாவில் கர்த்தரின் ஊழியர்கள் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது ஏன்? அந்த எல்லோருக்கும் என்பது இவர்களுக்கு இல்லையா?

ஆப்பிரிக்க கண்டத்தில் ஆதிவாசிகள் மத்தியில் உயிர் நீத்த கர்த்தரின் ஊழியர்களை கொன்றவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கவில்லையா.?உலகெங்கும் இப்படித்தானே இருக்கிறது

அதிகம் சொல்வானேன்…
இன்றய யூதர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பெயர் மகிழ்ச்சியை தரவில்லையே.அப்படியென்றால் அந்த “எல்லா ஜனம்” என்பது யார்.?

மேய்பர்களிடம் சொல்லப்ட்ட ஒரு வார்த்தையில் அவர் இரட்சகர் என்று அறியப்படுகிறது..
மீட்பர் அல்லது காப்பாற்றுபவர்.

ஏதோ ஒரு இக்ட்டில் இருந்து விடுவிப்பவர்.
நமக்காக போராடுபவர்.அது தானே இந்த வார்த்தையின் பொருள்….

மேய்ப்பர்களிடம் 'இரட்சகர்' என்பதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என்று கேட்டால்…அவர்களின் பதில் எப்படி இருக்கும்

அவர்கள் கானகவாசிகள். உலகில் எந்த அரசாங்கம் ஆண்டாலும் மேய்ப்பர்களை அதிகம் துன்புறுத்தாது..
மேய்பர்களால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்பட போவதும் இல்லை..

ஒரு வேளை அன்றய ரோமர்களிடம் இருந்து காப்பாற்ற பிறந்தவர் என நினைத்திருக்கலாம்..
அவ்வளவே..

சாஸ்திரிகள் போல திட்டமாக ஒரு முடிவோடு போனவர்கள் அல்ல…

இந்த' இரட்சகர்' என்பதை இயேசு கிறிஸ்துவை குழந்தையாக கண்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனித்தால்..
----------------------------------------------------------------------------------------------------
லூக்கா 2: 25. அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
26. கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28. அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------சிமியோனின் கருத்து…
(1)புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளி,
(2)உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமை
(3) சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
உம்முடைய இரட்சணியம்
(4) இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளம்.

இந்த சிமியோன் சாதாரண ஆள் அல்ல.அவனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவனுடையதும் அல்ல.காரணம்….25ம் வசனத்தில் சொல்லப்பட்டது போல “அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.”

-----------------------------------------------------------------------------------------------------பரிசுத்த ஆவியானவர் இரட்சகர் என்ற வார்த்தைக்கான பொருளை இலைமறைக் காயாக சொல்லிக் கொண்டே வருகிறார்..

நாம் ஆலயத்தில் இரட்சகர் பிறந்திருக்கிறார் என்று வாசிக்கப்பட்வுடன் எல்லாம் புரிந்தது போல மகிழ்ந்திருப்போமே. அப்படி அந்த நாட்களில் யாரும் புரிந்து கொள்ளவில்லை..

நாமே முழுவதும் புரிந்து கொண்டு விட்டோமா.? என்பது அடுத்த கேள்வி.
ஒருவேளை சிலுவை மரணக் காலங்களை கடந்து நாம் இருப்பதால் 75 சதவீதம் நாம் புரிந்தது உண்மைதான்…
---------------------------------------------------------------------------
சரி..இனி அடுத்து யார் என்று கவனிப்போம்

லூக்கா2:36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.
38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.
அன்னாளில் பேச்சின் முழுமை நமக்கு கிடைக்காததால் இதை விட்டு விடலாம்…ஆக இப்படியே காலங்கள் நகர்கிறது..

-
யோவான் ஸ்நானகன் .இந்த மர்ம முடிச்சிக்கு ஒரு சிறிய விளக்கம் கொடுக்கிறார்..

லூக்கா3:17. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
.இயேசு கிறிஸ்துவை குறித்து யோவான் ஸ்நானகனின் விளக்கம் இதுவும் உவமையாகவே இருக்கிறது.

(1)தூற்றுக் கூடை இயேசுவின் கையில் இருக்கிறது..
(2)கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்;
(3)பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்
இரண்டு கூட்டத்தார் இங்கே இருக்கிறார்கள்..
களஞ்சியத்தில் சேர்கக்ப்படும் ஒரு கூட்டம்
பதர்களான அக்கினிக்கு இரையாக்கப்படும் மற்றொரு கூட்டம்..

இதில் “எல்லா ஜனம்” என்பது இங்கு யாரை குறிக்கிறதோ
அவர்களுக்கு மகிச்சியளிப்பதுதான் இயேசுவின் பிறப்பின் செய்தி.

மற்றவர்களுக்கு நிச்சயமாக இல்லை..

இறுதியாக இயேசுகிறிஸ்துவே இதை பற்றி சொல்கிறார்..
-
மத்தேயு 13: 37. அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
38. நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
39. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
40. ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
41. மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
43. அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
நல்ல விதைகள் ஒரு கூட்டத்தார்
களைகள் ஒரு கூட்டத்தார்
.
இந்த காலத்தில் இந்த இரண்டு கூட்டத்தாரைப் பற்றிய செய்திகளை ஆலயத்தில் நிறைய கேட்டிருப்பீர்கள்….

ஆகவே “எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும”; என்ற வார்த்தைக்கு ஆழமான பொருள் உண்டு.. சாதாரணமான எல்லா ஜனம் அல்ல.இவர்கள் வேறு கூட்டத்தார்

இன்னும் அதிகமான விளக்கங்களை கர்த்தர் உங்களுக்கு நீங்கள் தியானிக்கும் போது உங்களுக்கு அருள்வாராக…முடிவாக அப்போஸ்தலனாகிய பவுலடியாரின் வார்த்தைகளோடு முடிக்கிறேன்..
-
51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
53. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
54. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
55. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
56. மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
57. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
58. ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியிளிக்கிறதா இல்லையா என்று உங்களை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்..
தூதன் சொன்ன' எல்லோருக்கும் 'என்ற கூட்டத்தில் நீங்களும் நானும் இருக்க கர்த்தர் உதவி செய்வாராக….

சனி, 14 டிசம்பர், 2024

கிறிஸ்துமஸ் செய்தி -2024

 கிறிஸ்துமஸ் நற்செய்தி...

நான் இதுவரை கிறிஸ்துமஸ் செய்தி எதுவும் எழுதவில்லை..

நிறைய கிறிஸ்து பிறப்பை பற்றிய பாடல்கள் எழுதியிருக்கிறேன்….அதில் அதோ ஒரு நட்சத்திரம் என்ற பாடலில்…. 1. 

வானத்தில் வழி அறிந்து ஞாலத்தில் நடந்தனரே 

ஞானத்தில் தன்னை மறந்து ஏரோதை அடைந்தனரே

 சின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார் 

அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார்  என…..இதொடர்கிறது..

இன்றும் அந்த ஞானிகளை பற்றி சிந்தித்தேன். அதனால் எழுதுகிறேன்..

.. 

          கிறிஸ்துமஸ் செய்தி (2024)

  1. ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

  2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.

இயேசு பிறந்த போது அவரைப் கிழக்கில் இருந்து சாஸ்திரிகள் வந்தார்கள். கிழக்கில் என்றால் அது எந்த நாடு என்ற ஆராய்ச்சி நமக்கு தேவையில்லாதது..

இந்தியா என்று அடித்து சொன்னாலும் சரி ஆப்கானிஸ்தான் என்று அடிக்காமல் சொன்னாhலும் சரி. நமக்கு அதனால் ஒன்றும் இல்லை

…..

இப்போது சாஸ்திரிகளை கவனிப்போம்

சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தை புதிதாக பார்த்து இது யூதருடைய இராஜா பிறக்கும்போது உதிக்கின்ற ஒன்றல்லவா ? என்று நினைத்து உடனே நேராக கிளம்பி எரோதின் அரன்மணைக்கு வந்து விட்டர்கள்..அவர்கள் படித்த சாஸ்திரத்தில் அப்படி இருந்திருக்கிறது..நல்லது

---------------------------------------------------------------------

இந்த நட்சத்திரம் பற்றி….

எண்ணாகமம் 24:1717. அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; 

 சரி…..

 இந்த சாஸ்திரிகளின் முதல் பார்வை சரிதான். 

ஆனால் அவர்களின் அறிவு அவர்களை ஒரு கோளாராண இடத்தில் கொண்டு போய்விட்டது. 

அது ஏரோதின் அரண்மனை..

அங்கே போய் நின்று கொண்டு தெனாவெட்டாக கேட்கும் கேள்வியைப் பாரங்கள்.. 

யூதருடைய இராஜா எங்கே..? அவர் இங்கே தானே பிறந்திருக்க வேண்டும். 

சொல்லுங்க..சொல்லுங்க..


சாஸ்திரிகள் கொஞ்சமும் அறியாத ஒரு காரியம்…

 ஏரோது இராஜா யூதன் அல்ல. ஆகவே யூதருடைய இராஜா அங்கு பிறந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது..

------

இன்றைக்கு பலரின் வெளிப்பாடு இப்படி இருக்கிறது. உலகில் உள்ள அறிஞர்கள் பட்டியலில் இயேசுவையும் சேர்த்துவிட்டு அவர் இங்கேதான் இருக்கிறார். 

மற்ற அறிஞர்களை போலவே இயேசுவும் ஒருவர் என வாதிடுவது..

இந்த தேடலினால் எந்த பயனும் ஏற்பட போவது இல்லை..


 சரி.. சாஸ்திரிகளின் தேடலில் முதல் தோல்வி முடிந்ததும் .

விதியில் இறங்கி சோகத்துடன் நடக்கின்றனர்.

 சோகம்னா சோகம் அப்படி ஒரு சோகம்..

அப்புறமாக வானத்தை பார்த்து பழைய படியும் நட்சத்திரத்தை தேடுகின்றனர்

----------------------------------------------------------------------------------------------------மத்தேயு 2: 9. ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.

அட .இதோ இருக்கு… பாரேன்… என்று நட்சத்திரத்தை பின் பற்றி சென்றனர்..

அப்போ இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் சாஸ்திரிகள் ஏரோது அரண்மனை வந்து சேர்ந்து “ பல்பு “வாஙகும் வரை நட்சத்திரத்தை பார்க்கவும் இல்லை அதை தேடவும் இல்லை..அதை தொடரவும் இல்லை

-

அதற்கப்புறம்தான் அந்த அதிசயம் நடக்கிறது…

---------------------------------------------------------------------------

அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது.

எல்லாமே சரிதான். 

ஆனால் ஒரு நட்சத்திரம் என்பது  என் வீடு பாளையங்கோட்டையில் இருந்து பார்த்தாலும் உங்க வீடு திருச்சியில் இருந்து பார்த்தாலும் ஒரே இடத்தில் இருக்கிற மாதிரிதான் இருக்கும்..

ஆனால் இங்கு அந்த நட்சத்திரம் பிள்ளை இருக்கும் ஸ்தலம் வரை அதாவது அந்த இடம் வரை அவர்களுக்கு வழி காட்டி அதன் பின் அசையாமல் நின்றது. என வேதம் சொல்கிறது. 

அப்போ அவ்வளவு பக்கத்தல தெரியுற மாதிரி வந்திருக்கிறது…

அதாவது ஒரு நூறடிக்கு மேலே தெரிகின்ற மாதிரிதான் இருந்திருக்க வேண்டும்..

இங்கே இவர்களின் அறிவு பூஜியம் ஆகிவிட்ட பின் கடவுளுக்கு வேறு வழி தெரியவில்லை என்றே நினைக்கிறேன்..அவர்கள் கண்களுக்கு மட்டும் அப்படி தெரிந்திருக்கலாம் அல்லவா?

இது ஒரு அதிசயம்.

--------------------------------------------------------------------------------------------


எப்படி இவ்வளவு திட்டமய்; சொல்கிறேன் என்றால் “நிற்கும் வரை” என்ற வார்த்தையை கவனியுங்கள்..அப்போ சாஸ்திரிகள் நட்சத்திரத்தை கடந்து கொஞ்ச தூரம் வரை சென்று.. அட ..”அது இங்கிட்டு வரலப்பா..அதோ அங்கே நிற்குது பாரு” என கூறிவிட்டு பிறகு Reverseல வந்திருக்க கூடும் என யூகிக்கிறேன்..

சரி எப்படியோ கண்டு பிடிச்சாச்சி.

 இனி ஏரோதிடம் போய்; சொல்ல வேண்டும் அல்லவா..

அதுக்கும்  ரெடியாயிட்டாங்க..

அப்போ என்ன நடந்தது..-

-------------------------------

12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

இந்த வசனத்தில் தேவனால் “எச்சரிக்கப்பட்டு” என்ற வார்த்தையை கவனிக்கவும்…

---------------------------------------------

அடேய் .... திரும்பி பார்க்காம “மரியாதையா வேறு வழியாய் ஊர் போய் சேருங்க” கர்த்தர் உரக்க சொல்ல .

சத்தமில்லாம ஊர் போய் சேர்ந்தார்கள் என்று வேதம் நமக்கு சொல்லி முடிக்கிறது..

-------------------------------------------------------- 

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்…

அறிவு ரொம்ப  அவசியம்..

ஆனால் அது கர்த்தரை தேடும் போது அதை ரொம்ப அடக்கி வாசிக்க வேண்டும்..

 அறிவை Use பண்ணினால் அது ஏரோதுவிடத்தில் கொண்டு போய் சேர்க்கும்.

நீங்க அங்க இருந்து தப்பி பிழைப்பதே பொரும்பாடு ஆகிவிடும்..உங்கள் நம்பிக்கை தவறோ என சந்தேகத்தை எழும்பச் செய்யும்…


விசுவாசம் என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது..

அற்புதங்கள் என்பது விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது..


ஒன்றுமில்லாமையில் இருந்து கர்த்;தர் உருவாக்குவார். இது அறிவியலால் ஒத்துக் கொள்ள முடியாது..

 கடவுளின் வெறும் வார்த்தையால் உலகம் உண்டானது என்று அறிவியல் ஒத்துக் கொள்ளாது..


இயற்கையே சகலத்தையும் தானாக உண்டாக்கியது என நமக்கு கல்வி ஆறு நாளும் போதிக்கிறது. 

ஏழாவது நாள் ஆலயத்தில் போய் கர்த்தர் வார்த்தையாலே வானத்தையும் பூமியையும் படைத்தார் என நம்புகிறோம்…இந்த படிப்பில் நாம் முனைவர் பட்டமெல்லாம் வாங்கி பெறுமையடைகிறோம்

.சரி.. இது வேறு விவாதம்..


பவுலடியார் சொன்னது போல உலக கல்வியிறிவை குப்பை என நினைக்கும் இடத்திற்கு நாம் வந்தால் நல்லது..

பிலிப்பியர் 3: 11. ..அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

பவுலடியார் அந்த காலத்தில் மிகப் பொரிய படிப்பை படித்தவர் என கூறுகின்றனர்..

.இன்னும் ஒரு காரியம் சொல்கிறேன். 

இயேசுவோடு

அவர் சீடர்கள் படகில் ஒரு முறை பயணம் செய்து கொண்டிருக்கும் போது புயல அடிக்கிறது.. படகு புயலினால் ஆடுகிறது.. 

வசனத்தை கவனிப்போம்..

மத்தேயு 8: 23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள். 

 24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.

 25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.

 26. அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும்  கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

-----------------------------------------------------------------------------------------------------

கடலில் பெருங்காற்று உண்டானால் அலைகள் எழும்பத்தான் செய்யும்..

அலைகள் எழும்பினால் படகு கவிழத்தான் செய்யும்.

 படகு கவிழ்ந்தால் உயிர் போகத்தான் செய்யும்..

ஆக இந்த சூழ்நிலையில் சீடர்கள் அலறியது சரிதானே…

 இது உலக நீதி..


ஆனால் கர்த்தரின் வார்த்தை வேறு விதமாக இருக்கிறது. சூழ்நிலையைப் பாராதே.. உன் அருகே அமைதியாய் தூங்கிக் கொண்டிருக்கும் ஆண்டவரைக்; கவனி என்கிறது.

இது மிக கடினமான காரியம்தான் .


ஆனால் ஒரு விசுவாசியின் பயிற்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என வேதம் நமக்கு சொல்கிறது..

1கொரி-3:19 இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,

20. ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.

1கொரிந்தியர்.1:27.. 27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

முடிவுரை…நாம் கர்த்தர் தெரிந்து கொண்ட பாத்திரமாக இருக்க வேண்டும் என்றால் விசுவாசத்தை முன் வைத்து உலக ஞானத்தை பின்னுக்கு தள்ளி விடிவெள்ளி நட்சத்திரமாகிய இயேசு கிறிஸ்துவை பின் தொடர்வோமாக….

அடுத்து இயேசுவைக் காண வந்த மேய்ப்பர்களைப் பற்றியது..

--------------------------------------------------------------------------------------

லூக்-2:8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

(1)மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் தங்கி…..ஒரு மேய்ப்பன் இரவில் எங்கு இருக்க வேண்டுமோ அங்கே இருந்தார்கள்..

(2)தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்..

தமது உடமைக்கு சரியான பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்..

ஒரு மனிதன் உலகத்தில் தனக்கு கிடைத்திருக்கும் கடமையில் தவறாது இருப்பதே கர்த்தர் அவனிடம் நெருங்க ஒரு காரணமாக இருக்கிறது. அதை வேதம் பாராட்டவும் செய்கிறது.. 

-------------------------------------------------------------------------------------------

நீதிமொழிகள்-22:29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

--------------------------------------------------------------------------------------------

ஒன்று.. அவன் இராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.அல்லது இராஜாவின் ஆட்கள் அவன் முன்பாக நிற்பார்கள்..

இங்கே நான் இரண்டாவதாக சொன்ன காரியம் நடந்தது..


  லூக்கா 2: 9. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்

---------------------------------------------------------------------------------------------

கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான்..

பல மந்தைகள் அவ்விடத்தில் இருந்தது.

எல்லா மந்தைகளிடத்திலும் அதனதின் மேய்ப்பர்கள் இருந்தார்கள். 

அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான்,

அதுவும் அவர்களின் நடுவே கர்த்தரின் தூதன் வந்து நிற்கிறான்..

தூதன் வந்து நின்றவுடனே கர்த்தரின் மகிமை மேய்ப்பர்களை சுற்றி பிரகாசிக்கிறது.கவனிக்க வேண்டிய வார்த்தை..

அவர்களை..

எவர்களை..

மேய்ப்பர்களை..

தங்களை சுற்றிலும் பிரகாசம் வந்தவுடனே அவர்கள் “பயந்தார்கள்”

கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்

என்ன ஒரு அருமையான பதிவு..

ஒரு உண்மையான மனிதனிடத்தில் கர்த்தர் அன்பாகவும் நெருக்கமாகவும் இருக்கிறார். இதன் மூலம் அவன் வரங்களினால் பிரகாசிக்கிறான். 

பிரகாசிக்கும் 

எல்லோருமே முதலில் கர்த்தருக்கு பயப்பட வேண்டும்..

அது கர்த்தருக்கு ஏற்ற பயம்…

இதற்கு நான் தகுதியானவான..? என்கின்ற பயம்..

நான் இருந்த இடம் ஒரு காடு.

என்னை சுற்றிலும் மிருகங்கள்தாள் இருக்கிறது..

நான் தனித்து இருக்கிறேன். ஆனால் கர்த்தரின் தூதன் வருகிறான் பின் வெளிச்சம் பிரகாசிக்கிறது.

நல்ல விஷயம்…

லூக்கா2:10.

 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

 11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 

 12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

தூதன் எதற்காக மேய்ப்பர்களிடம் அனுப்பபட்டானோ அந்த காரியம் நிறைவேறுகிறது. 

ஆம்.உலகின் மிகப் பெரிய நற்செய்தி சில சாதாரண மனிதர்களிடம் முதல் முதலாக தெரிவிக்கப்படுகிறது..

அவர்களுக்கு இயேசு எங்கே பிறந்திருக்கிறார் என்றும் மிக துல்லியமாக தூதன் தெரிவிக்கிறான்…

---------------------------------------------------------------------------------

11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

இயேசுவை போய் பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் அவர்கள் விருப்பம் என நினைத்தோ என்னவோ…நீங்கள் போய் பணிந்து கொள்ளுங்கள் என்று சொல்லப்படவில்லை..

இன்னும் ஒரு சம்பவத்தையும் பார்க்கலாம்.. 

லூக்கா24:28. அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் (எம்மாவு )சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.

தனி மனித சுதந்திரம் ஏதேன் தோட்டம் முதல் சிலுவை வரை காக்கப்படுகிறது

-------------------------------------------------------------------

இங்கே மேய்ப்பர்களிடத்தில் போனால் “காண்பீர்கள்” என்று இலைமறைக்காயாக கூறப்படுகிறதை நாம் கவனிக்கலாம்…

சரி…நற்செய்தி சொல்லப்பட்ட உடனே என்ன நடந்தது..?

-------

13. அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: 

 14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். 

------------------------------------------------------------------------------------------------

அந்தசஷணமே..

உடனே ….பரம சேனையின் திரள்..அதாவது எண்ணிக்கைக்கு அடங்காத பெருங் கூட்டம் தோன்றி கர்த்தரை துதிக்கிறார்கள்…

மேய்ப்பர்கள்; திகைத்து நிற்கிறார்கள்..

15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,

 16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். 

இவைகள் நடந்து முடிந்த உடனே மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை மறந்து இயேசுவைக்காண விரைந்தார்கள்..

---------------------------------------------------------------------------------------

மாற்-8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

தனது கடமையை செய்யும்; ஒருவரை வேதவசனம் பாராட்டுகிறது. 

அதே மனிதன் தனது வாழ்க்கையில் கர்;த்தரை முதன்மை படுத்த வேண்டிய இடம் ஒன்று வரும்போது அவன் கர்த்தர் பக்கமே நிற்க வேண்டும் என்றே வேதவசனம் நமக்கு போதிக்கிறது..

--

ஊழிய அழைப்பு உள்ளவர்கள் உலக வேலையை உதறுவது உத்தமம்…( இது எனது தனிப்பட்ட முடிவு )

சரி.. இப்போது மேய்ப்பர்கள் கதைக்கு வருவோம்..

தேவதூதன்; வந்தான்

நற்செய்தி சொல்லப்பட்டது

மகிமையை கண்டாகிவிட்டது

தூதர்கள் போய்விட்டர்கள்

இயேசுவையும் மேய்ப்பர்கள் கண்டு வணங்கியாகிவிட்டது.

ஓகே..எல்லாம் முடிந்ததா..இனி மந்தைக்கு திரும்பி விடலாமா?

நல்ல வாழ்க்கை. 

நல்ல சம்பளம்.

அருமையான சபை. 

வாரம்தோறும் நல்ல நற்செய்தி

 மேலும் துதி தோத்திர பாடல்கள்..

வேறு என்ன வேண்டும்..? 

ஆனால் மேய்ப்பர்கள் வேறு முக்கியமான ஒன்றை செய்தார்கள்..

அது

-------------------------------------------------------------------------------------

லூக்கா 2:17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.

 18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு கிறிஸ்துவை நீங்கள் எப்படி அவரை கண்டீர்களோ அப்படியே மற்றவர்களுக்கு சொல்வது. இதனால் எத்தனை உள்ளங்கள் ஆச்சரியப்படும்…

இன்னும் இதை விளக்கNவுண்டிய அவசியம் இல்லை.

-------------------------------------------------------------------------------------------

தமது ஞானத்தை நம்பி வந்த சாஸ்திரிகளும் இயேசுவை தேடி வந்து கண்டார்கள்.ஆனால் யாரிடமும் அதை அறிவிக்க முடியாமல் தங்கள் வந்த வழியே திரும்பினார்கள்..


மேய்ப்பர்களோ ஊரெல்லாம் கர்த்தரை பிரசித்தம் பண்ணினார்கள்..

அனவைருக்கும் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்தை Soulwinners சொல்கிறது..

நாங்கள் இயேசுவை அறிவிக்கும் இந்த வேலையைத்தான் செய்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக..

---------------------------------------------------------------------------------------------