செவ்வாய், 9 செப்டம்பர், 2025

                                                                    மீட்பு…

யாரு வந்திருந்தாங்க மந்திரம் ?

 எங்க சித்தி

அது என்ன கையில புக்.

இந்தா.. இது ..பைபிளாம். படிக்கணுமாம்.

மூர்த்தி வாங்கிப் பார்த்தான். படித்தான் . புதிய ஏற்பாடு.

இதெல்லாம ஏதுக்குடா..வேற காசு பணம் ஏதும் தரலியா..

கொடுத்திருக்காங்க..வார்டன் கொண்டு தருவான்..

வேற என்ன சொன்னாங்க.. 

நல்லவனா மாறனுமாம்..ஏதோ....இரட்சிக்கப்படணுமாம்.

அப்டின்னா.?

தெரியல..

அப்புறம்.உங்க அம்மா வரலியா.?

இல்ல..ஜாமின் எடுக்க பணம் இல்லையாம்.

ஓ…நீ பேசாம அண்ணாச்சி குரூப்ல சேர்ந்திடு அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க..

யோசிக்கணும்..

இப்பவே பாதி சேர்ந்திட்ட..


ம்.பிளைடு வாங்கி கொடுத்தேன்..

 ஆமா .நான் அவன் மூஞ்சில அடிச்சேன்..உன்னையும் சேர்த்து தூக்கி உள்ள போட்டிட்டாங்க.

ஜெயிலு போகப்போக பழகிடும் மந்திரம்..

நீயே தனியா காரியம் செய்யணும். அதான் முக்கியம்….மத்தத அண்ணாச்சி பார்த்துக்கிடுவாரு..

யாரு இந்த அண்ணாச்சி…ம். அது சரி. இதுல அவருக்கு இதுல என்ன லாபம்..


அடிக்கிறதுல பத்து பிரசண்ட் அவருக்கு ...போலிசுக்கு…  அப்புறம் நமக்கு.. எல்லாம் ஒரு கணக்கு இருக்கு…அதுப்படி நடக்கும்..

அப்போ களவு கொடுத்தவனுக்கு என்ன கிடைக்கும்.?

மிச்சம் மீதி அவனுக்குதான்.~ஹா..ஹா..ஹா..ஹா

 

மிச்சம்னா.எவ்வளவு?

 அது அவன் தலைவிதிப்படி கிடைக்கும்..

நீ அன்னைக்கி அடிச்சியே அதுல எவ்வளவு இருந்தது..


இருபது லட்சம் பணம்..ஐம்பது பவுன் நகை.. 

அடேங்கப்பா..அப்புறம்..

நான் பிடிபட்டதும் ஒரு வாரம் ஹோட்டல்ல என்ன தங்க வச்சாங்க. அதுக்கப்புறம் கோர்ட்ல ஆஜர் படுத்தினாங்க.


திருடன் பிடிபட்டான். ஒரு வாரம் அழகிகளுடன் உல்லாசம். அப்படின்னு பேப்பர்ல செய்தி போட்டாங்க..அவ்வளவுதான்.

 பாதி நகையை இவங்க அமுக்கிட்டாங்க..என் பங்கு எவ்வளவுன்னு போய்தான்; கேட்கணும்.


அப்போ ஜாமினுக்கு நீ செலவழிக்க வேண்டாம்…

ஆமா.ஆனாலும் கேச பொறுத்து செலவுக்கு  என் பங்கும் கொஞ்சம் போகும்..

 

இதுல என்ன உனக்கு லாபம் இருக்கு..


போலிஸ் அடிக்க மாட்டாங்க. மரியாதையா நடத்துவாங்க.அண்ணாச்சி இல்லன்னா. தலை கீழா கட்டி தொங்கவிட்டு லாடம் கட்டுவாங்க. பரவாயில்லையா.?

 அப்படியா.?

ஆமாடா. அன்னைக்கி கூட உன்ன அடிச்சாங்களா.? இல்லலா ..


ராவுல பிரியாணி வாங்கி கொடுத்தாங்களா..?

ஆமா.

பார்த்தியா அதான். அண்ணாச்சி ஆளுன்னு உன்ன விட்டுட்டாங்க இல்லன்னா ஒரு மாசம் கக்கூஸ் போக உக்கார முடியாது மவனே..பின்பக்கம் விங்கிப்போகும்..

சரி…உன்ன ஜாமின்ல எப்போ எடுக்க போறாங்க.

 

அடுத்தவாரம்..

பணம் இல்லன்னு சொன்னியே.

பாஸ்டர் பணம் கொடுக்கிறதா சொல்லி இருக்காராம்…

யாரு பாஸ்டர்.?

 அவங்க சர்ச்ல இருக்கிறவரு…

அப்போ நீ கிறிஸ்டீனா.?

 இல்ல எங்க சித்தி கிறிஸ்டீனா ஆயிட்டாங்க..

ம்..அதான் புத்திமதி சொன்னாங்களாக்கும்..

அப்புறம் என்ன சொன்னாங்க.? 

நல்ல பிள்ளையா மாறணுமாம்..

ம்..

..அது என்னவோ ..இரட்சிக்கப்படணுமாம்…

அப்படின்னா? 

 தெரியல..இந்த புத்தகத்தில எழுதி இருக்காம். படிச்சா புரியுமாம்.

சரி..பிரிச்சி படியேன்…


12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

 13. அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.

 14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.


என்னடா  உனக்கு எதாவது புரியுதா ..?

ம்..ம் புரியல.. 

. சரி விடு

.நீ வெளியே போனதுக்கு அப்புறம்தான் நான் வெளியே வருவேன்…சும்மாவாவது என்ன வந்து பாரு..ஒன்னா ஜாலியா தண்ணி அடிக்கலாம்..


என் பெயர் மந்திரம் .கொத்தனார் வேலை செய்தேன்.இப்போ முடியல.கை நடுங்குது..ஓவர் தண்ணி..காலையில எழுந்த உடனே குடிக்கணும்…சாயங்காலம் நல்ல குடிக்கணும்..குடிக்க காசு வேணுமே…அதான் திருடினேன்..மாட்டிக்கிட்டேன்..அதுவும் இவன் கூட சேர்ந்து ஒரு சம்பவம் செய்தேன்.அந்த திருட்டுலதான் இப்போ உள்ள இருக்கேன்..

 

சித்தி சொன்னது போல ஒரு வாரத்தில ஜாமின்ல எடுத்திட்டாங்க..அதுக்கப்புறம் பத்து நாள் கழிச்சி மூர்த்தி வெளியே வந்தான்..

அவன பாளையங்கோட்டை ஜெயில் வாசல்ல வச்சி சந்திச்சேன்…அப்படியே டாஸ்மாக் கடைக்கு போயி நல்லா குடிச்சோம்…அப்போ கேட்டான்…

என்னடா அண்ணாச்சிகிட்ட வாரியா.?

யோசிக்கணும்…

சரி யோசி….அப்புறம் அன்னைக்கி என்னமோ சொன்னியே..ஆங்..இரட்சிக்கபடணும்னு..

அதுக்கு அர்த்தம் என்னன்னு கேட்டியா..?

ஆமா கேட்டேன்.அது மீட்பாம் ..

ஓ..மீட்புன்னா…

பக்கத்து டேபிள்ள இருந்து ஒருத்தன்…அதான் மழை பெய்து வெள்ளம் வந்தா மீட்பு குழுன்னு ஒன்னு வருமே அது தான் மீட்பு.. அதாவது காப்பாற்றுதல்…


போச்சுடா…எதுல இருந்து யாரை காப்பாற்ற..

தெரியலியே..

எப்பா… போதை ஏறுது…இதுல இதப்பற்றி இதுக்கு மேல இத பேச வேண்டாம்…


இந்தப்பாரு மந்திரம்.. அண்ணாச்சி சொல்லி அனுப்பினாரு..அடுத்த வாரம் ஒரு ப்ராஜக்ட் இருக்கு..செமயா லாபம் கிடைக்கும்.. நீயும் வார.  .சும்மா வீட்டுக்கு வெளியே இருந்து எனக்கு நிலவரத்த போன்ல சொன்ன போதும்.வேலை சுலபம்…என்ன சொல்ற…


என்னடா இப்போதான் வெளியே வந்திருக்க..அதுக்குள்ளயா..?

இதுக்கெல்லாம் நேரம்காலமே கிடையாது மந்திரம். லம்பா ஒரு அமௌண்ட் கிடைக்கும் அது வரைக்கும் இப்படித்தான்…


ஓகே சரி எனக்கு புரியல…விளக்கமா சொல்லு


நீ வேணும்னா அந்த வீட்டுக்கு நேரா போய் பாரு.அம்பாசமுத்திரம் மெயின் ரோட்ல இருக்க தெரு.

முழு அட்ரஸ் தாரேன். அந்த வீட்ல ஒரு கிழவி மட்டும்தான் இருக்கா. அவா மகன் இப்போதான் பெங்களுர்ல இருந்து வந்திருக்கான்..அவன் மகளுக்கு கல்யானமாம்..மொத்த நகையும் வீட்லதான் இருக்கு.

திங்கட்கிழமை குடும்பமா வேளாங்கன்னி கோயிலுக்கு போறாங்க..திரும்பி வர நடுஇராத்திரி ஆவும். சரியா இராத்திரி ஒன்பது மணிக்கு நான் உள்ள இறங்குறேன்..

கிழவி மண்டையில இலேசா ஒரு தட்டு. மொத்த நகையையும் வாரிகிட்டு வந்திடுதேன். 

நீ வீட்டுக்கு வெளியே நின்னு போன்ல எதாவது பிரச்சிணைன்னா தகவல் சொல்லு.. அது போதும். வெற்றிகரமா. முடிக்கோம்.உன் பங்கு லட்சத்தில வந்து சேரும்...ஞாபகம் வச்சிக்கோ..

 சம்பவம் அடுத்த வெள்ளிக்கிழமை..


யோவ்;..களவு கேசு கொலை கேசா ஆயிட்டுன்னா பல வருசம் ஜெயில்லதான் கிடக்கணும் பாஸ்…


அதெல்லாம் அண்ணாச்சி பார்த்துக்கிடுவார்..அவருகிட்ட முப்பது வக்கீல்கள் இருக்கங்க ? ஒரு வருசத்தில் ஜாமின்ல வெளியே வந்திடலாம்.

 ஆ ஊ ன்னா அண்ணாச்சிங்கிறே ..யாருப்பா அந்த அண்ணச்சி  அவரு பேரு.? .

அதெல்லாம் உனக்கு எதுக்கு. அவரும் கிறிஸ்டியன்தான்…ஆனா பலே கில்லாடி. நேரம் வரும்போது உனக்கு அவர காட்டுறேன்.

.முதல்ல இத செய்து முடிப்போம்..

ஒரு வாரம் செமயா கழிந்தது. செலவு தண்ணிபட்டபாடாய் இருந்தது..பணத்தபத்தி மூர்த்தி; கவலையே படல..

இன்னைககு; இரத்திரி தயார் ஆகனும்..

காலையில நாங்க குடிச்சோம்..இனி குடிக்ககூடாதுன்னு மூர்த்தி; சொன்னான்.வேலை சொதப்பிடுமாம்..

ஓ கே..

மாலை ஆறு மணி.

.சித்தி கூப்பிட்டாங்க. பாஸ்டர் என்னை பர்க்கணும்னு சொன்னாராம்..

நான் இன்னைக்கு சம்பவம் செய்யக் கூடிய வீட்டை ஒரு தடவை பார்த்திட்டு வரக் கிளம்பினேன்..

பார்த்தாச்சு.. வீடு சுத்தமா இருக்கு..ஆள் நடமாட்டம் கம்மியா இருக்கும் தெரு. 

கேமிரா ஒன்றும் இல்ல..வசதிதான்..

சரி இப்போ பாஸ்டரை பார்த்து விட்டு சீக்கிரமாக வந்துவிடலாம் என்று கிளம்பினேன்..

  போனேன்..

 காபி கொடுத்தாங்க..பாஸ்டர் வெள்ளை வேட்டி சட்டையில் பிரகாசமா இருந்தாரு…தன் பக்கத்தில உட்கார சொன்னார்.

என் தலையில கைய வச்சி யாருகிட்டயோ ஏதோ போசினார்.

அது ஜெபமாம். பின்னால தெரிஞ்சிக்கிட்டேன்..எனக்கு ஏதோ பாரம் ;இறங்கின மாதிரி இருந்தது..

 .

மூர்த்தி கிட்ட இருந்து போன் வந்தது…  நான் எடுக்கல.

பாஸ்டர் என்னை ஒரு ஆள் கூட துனிக் கடைக்கு அனுப்பினார்.அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிந்தது. எனக்கு டிரஸ் வாங்க வந்திருக்கோம்னு..

திருவனந்தபுரம் வரை போகணும் கூட வா என்று சொன்னார்.

மனதுக்குள்ள நான் அந்த கிழவியை நினைத்தேன்..நான் போகலன்னா மூர்த்தி வருத்தப்படுவானே. நான் நினைத்தது போல மூர்த்தி; போன் பண்ணினான்..

 சீக்கிரம் வான்னான்..

நான் ஒன்பது மணிக்கு வாரேன்னு சொன்னேன்..

 

பாஸ்டர்.. தம்பி வா போகலாம்னு சொன்னார் ..

இல்ல ..எனக்கு வேலை இருக்கு…

அவரு என்னை உற்றுப் பார்த்தார்.

தெரியும..; இன்னைக்கு என் கூட வா..

என்ன தெரியும். இவருக்கு..?

நீ எது வரைக்கும் படிச்சிருக்கே.

எட்டாம் வகுப்பு வரை..

சரி அப்போ இதை படி..கொஞ்சம் சத்தமா….

படித்தேன்…

  1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 

  2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

  3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 

  4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

  5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

  6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.


எனக்கு புரியல….யாருக்கு இது சொல்லப்பட்டிருக்கு..

நான் பாஸ்டரை பார்த்தேன்…

.புரிந்ததா.?

இல்ல….

 சரி மெல்ல புரியும்….இப்போ என் கூட வா..

 நாங்கள் புறப்பட்டோம்….

 மணி ஒன்பது.. நாங்கள் களியக்காவிளையில் ஒரு ஹோட்லில் பீப் கறியோடு புரோட்டாவை கடித்துக் குதறிக்கொண்டிருந்தேன்..

 மூர்த்தி; பல முறை எனக்கு கால் செய்து கொண்டே இருந்தான். நான் என்ன சொல்ல…பேசினேன்..  பாஸ்டர் கிட்ட இருக்கேன் வந்திடுதேன் என்றேன்.ஆனால் செல்லை ஆப் செய்து விட்டேன்.


மூர்த்தி; திட்டமிட்டது போல ஒன்பது மணிக்கு அந்த வீட்டிற்கு சென்றான்..சுவர்களின் மூலைகளை கவனித்தான் .காமிர எதுவும் பொறுத்தப்படவில்லை. ஓகே கதவை தட்டினான்..கிழவி கதவை திறந்தாள். மெதுவாக உள்ளே போய் கதவை சாத்தினான். கிழவி அவனை சாந்தமாக பார்த்தாள்..

இது மந்திரத்திற்கு வினோதமாக இருந்தது.கிழவி கண்களில் பயம் இல்லையே..பயம் இருக்கும் இடத்தில்தான் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

இது உதைக்கிறதே. ஏதோ தவறு நடக்கிறது..

ஏய் கிழவி நகை மொத்தமும் எங்க இருக்கு.?

கிழவி பீரோவை காட்டினாள்.பீரோ திறந்தே இருந்தது. நகைகள்...நகைகள்..

மந்திரம் திகைத்தான்.. கிழவி ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு வேடிக்ககையாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.

வேற பணம் எங்க இருக்கு..?

ஒரு பேக்கை காட்டினாள்.

ஜிப்பை திறந்தான். கட்டுக் கட்டாய் ஐநூறு ரூபாய்தாள்.

கிழவி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள்;

ஜன்னல் பக்கத்தில் ஏதோ நடமாட்டம்.

பிளான்படி பின்பக்கம் வழியாக தப்பிக்க வேண்டும்.பணத்தையும் நகையையும் வாரி சுருட்டிக் கொண்டு பின் கதவு பக்கம் போனான்…கதவு பக்கத்தில் ஒரு சிறிய ஜன்னல். கவனித்தான். இரண்டு கிராமத்தான் வீச்சரிவாளோடு பதுக்கியிருந்தார்கள்.

மாட்டினேன்..

கிழவி அதே இடத்தில் ஆப்பிளை நறுக்கி கொண்டிருந்தாள்..

கதவு தட்டப்பட்டது..கிழவி மந்திரத்தை பார்த்தாள். 

நிதானமாக போய் கதவை திறந்தாள்.

எல்லாம் முடிந்தது. 

மூர்த்தியாகிய நான் திகைத்திருந்தேன்..வழக்கம்போல அடித்தார்கள். போலிஸ் வந்தது ;புறங்கை கட்டப்பட்டு இழுத்துச் சொன்றார்கள்..எனக்கு புரியவில்லை. எப்படி சிக்கினேன்.?

ஏட்டையா.. இது எப்படி நடந்திச்சி..

அடா முட்டாப் பயலே …கேமராவ அவன் வீட்ல மாட்டல. இன்னைக்கு சாயங்காலமா எதிர் விட்ல கேமிராவ மாட்டி அவன் வீட்டைப்பார்த்து வச்சிருக்கான். நீ அங்க நடமாடுனதா அவன் செல்போன்ல கவனிச்சி எதிர் வீட்டுக்காரனுக்கு வேளாங்கன்னியில் இருந்தே தகவல் கொடுத்திட்டான். போலிசுக்கும் சொல்லி. உன் படத்தையும் அனுப்பிட்டான். ஓகே.இனி ஒரு வருஷம் உனக்கு மாமியார் வீடுதான்.களிச்சோறுதான்..

ஆமா உங்கூட ஒருத்தன் அலைவானே அவன் பேரு என்ன?..மந்திரம்…அவன் என்ன ஆனான்..

அவன் ..யாரோ  ஒரு பாஸ்டர் கூட போயிட்டான்..

பாஸ்டர் கூடவா ?….அப்போ அவன இந்த கேசுல சேர்க்க முடியாது. வலுவான சாட்சி அவன் பக்கம் இருக்கு..தப்பிச்சிகிட்டான்..பாஸ்டர் காப்பாத்திட்டார்.. ஹா ஹா ஹா


ஒரு மாசம் கழித்து  மூர்த்திய பார்க்க மந்திரம் ஜெயிலுக்கு போனான்…

என்ன மந்திரம் ஆளே மாறி இருக்க.வெள்ள சட்டை..வெள்ள வேட்டி..அரசியல்வாதி மாறி இருக்க…அந்த சம்பவத்தன்னைக்கு நீ என் கூட வந்திருந்தேன்னா நீயும் இங்க என்கூடத்தான் இருப்பே..

அது என்ன சொன்னே..இரட்சிப்பு…..அதாவது மீட்பு..அதன் நீ அந்த பாஸ்டரால் காப்பாற்றபடட்டிருக்கே….அதாவது இரட்சிக்ப்பட்டிருக்கே…ஹா ஹா ஹா ஹா

மந்திரமும் சிரித்தான்…


மீட்பின் முழு விபரமும் அவனுக்கும் இன்னும் தெரியாது . ஆனால் போகப் போக தெரியும்.

மீட்பு இயேசு கிறிஸ்துவிடம் இருந்து வந்தது.ஆனால் அதற்கு பாஸ்டர் ஒரு கருவி…

மந்திரம்.. இந்த கிறிஸ்தவங்ககிட்ட ஜாக்கிரதயாய் பழகணும். கொஞ்சம் விட்டா நம்மள இரட்சிக்கபட வச்சிருவாங்க..

மூர்த்தி வாய்விட்டு சிரித்தான்..ஆனாலும் அது நன்மைக்குதான் நன்பா..

எனக்கு இதுதான் வாழ்க்கைன்னு ஆயிட்டு. நீ தப்பிட்டே…அதாவது இரட்சிக்கப்பட்டுட்டே..மீண்டும் மூர்த்தி சிரித்தான்….

மந்திரம் தன் பையில் இருந்து ஒரு புத்தகத்தை மூர்த்தியிடம் எடுத்து நீட்டினான்..

இது என்னது…

 புதிய ஏற்பாடு..

.ஓ.ஹோ நானும் இரட்சிக்கப்படனுமா..? நல்லாயிருக்கு..

நல்லாயிருக்கு..பர்க்கலாம் நன்பா..இனி உனக்கு அண்ணாச்சி தேவைப்பட மாட்டார்….

போங்க போங்க. சிறைவார்டன் விரட்டினார்…மூர்த்தி ஜெயிலுக்கு உள்ளே சென்று மறைந்தான்..

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக