புத்தி தெளிந்தபோது,
-------------------------------------
லூக்கா-15:17 அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
நான் சொல்ல வரும் கதையைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்தருக்கும். இருந்தாலும் அனேக நாளாக இந்த வார்த்தை என் மனதிற்குள் பல முறை பேசிக் கொண்டே இருந்தது.
நான் புரிந்தவைகளை எழுதுகிறேன்..
இந்த கதையில் முக்கிய பாத்திரங்கள் மூவர்
தகப்பன்
இளைய குமாரன்
மூத்த குமாரன்.
இப்போது கதைக்கு வருவோம்..
இளைய குமாரனின் “டயலாக்கோடு” கதை ஆரம்பிக்கப்படுகிறது..
இதோ..
12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
இதில் மகனின் ஆரம்ப வார்த்தையை கவனியுங்கள்..
தகப்பனே…..
உறவை சொல்லி அழைக்கிறான். இது நல்ல குணம்தான்…
.இந்த கதை விசுவாசிகளுக்கும் பரம தகப்பனுக்குமான உறவை பற்றி கூறுவதாகத்தான் காண முடிகிறது..
தகப்பனே…..நாம் ஒரு காரியத்தை கர்த்தரிடம் கேட்கும்போது நாம் முதலில் என் சொல்கிறோம் பிதாவே..அல்லது தகப்பனே..
நான் கூட
ஜெபிக்கும் போது.நல்ல தகப்பனே என்றே ஆரம்பிக்கிறேன்.
நான் தகப்பனே என்று அழைக்கும்போதே அவர் புரிந்து கொள்கிறார்.மகன் ஏதோ கேட்க போகிறான் என்று.
இதுவும் நல்ல காரியம்தான்..
இரண்டாவதுதான் மகன் தமது நோக்கத்ததை நிறைவேற்றுகிறான்….எப்படி.?
-----------------------------------------------
ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும்
தனது தகப்பனின் ஆஸ்தியில் தமக்கும் பங்கு உண்டு என்று நிச்சயமாக அறிந்தவன்…
நாம் ஜெபத்தில் கேட்கிறோமே ..இயேசு கிறிஸ்துவின் மூலமாக கேட்கிறோம் பிதாவே…
எனக்கு இதில் உரிமை இருக்கிறது. ஆகவே தாருங்கள் என்கிறான்..
ஆஸ்தியை கேட்பதின் காரணம் என்ன.?
காரணம் தகப்பனுக்கு தேவையில்லாத ஒன்று என நினைக்கிறான்.
என் வாழ்க்கை என் முடிவு..?
நான் பல நேரம் சில காரியங்களுக்காக ஜெபிப்பேன்.அது கர்த்தருக்கு பிரியமானதா.?அவருக்கு சித்தமானதா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை அது எனக்கு மேன்மையானது.இன்பமானது..அது எனக்கு தேவை என் நினைத்து கேட்கிறேன்.ஆனால் அது நடக்காது.
நானும் சரி இது தேவசித்தமல்ல போலும் என விட்டு விடுவேன்.
ஆனால் நான் பிடிவாதமாக அதற்காக என் உரிமையை நிலைநாட்டி உபவாசம் இருந்து கடவுளிடம் கண்டிப்புடன் எனக்கு வேண்டும் என உறவைகாட்டி மிரட்டினால்..சரி போகட்டும் என கொடுத்துவிடுவார்.
இதுதான் இளையவன் வாழ்வில் நடந்தது.
இப்போது அவன் செல்வந்தன்….சுய அதிகாரம் உள்ளவன்..ஏற்கனவே அவனின் தகப்பன் அரவனைப்பில் இருக்கும் போதே அவன் செல்வந்தன்தான்..உலக கண்களுக்கு இப்போது இன்னும் அதிக செல்வந்தனாக தன்னை காட்டிக் கொள்கிறான்….
சுய சித்தம் உள்ளவர்கள் ஆவிக்குரிய உலகில் வேகமாக ஜொலிப்பார்கள்…தகப்பனின் அரவனைப்பில் இருப்பவர்களைவிட பல மடங்கு வேகமாக இருப்பார்கள்….
நானோ நீங்களே இதை கவனிக்க வேண்டும். என் வாழ்க்கையில் அடிக்கடி குறைவுகள் வந்து என் தகப்பனிடம் அதற்கான நிறைவை கேட்ட பெற்றுக் கொள்ளும் நிலையில் நான் இருந்தால் அது சரியானதே…தகப்பன் என்னை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றே பொருள்…
நினைத்ததை உடனே என்னால் செயல் படுத்த முடிகிறது. எந்த தடையும் இல்லை என்றால் சற்றே நிதானியுங்கள்.இந்த அதிகாரம் சுய அதிகாரம்.
இது இருக்குமானால் தகப்பனின் கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் இல்லையென பொருளாகும்…
சுய அதிகாரம் உள்ளவர்கள் மிகுந்த ஆனந்த களிப்பாக இருப்பார்கள்..இந்த சமயத்தில் குறைவு என்பதே இராது…
அடுத்து அவன் என்ன செய்கிறான் என பார்ப்போம்..
13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
தகப்பனின் சொத்து கிடைத்துவிட்டது….அதை வைத்து அந்த ஊரில் சிலதை சம்பாதிக்கிறான்..
கிருபையாக வரங்கள் ஒரு மனிதனுக்கு கர்த்தர் தரும்போது அதை இப்படித்தான் உபயோக படுத்த வேண்டும் என்ற கட்டளையை கர்த்தர் கொடுப்பதில்லை.
கர்த்தர் கொடுத்த வரங்களினால் அந்த மனிதன் மற்றவர்கள் நடுவில் மிக மேன்மையான நிலையை அல்லது புகழை அடைய முடியும் .
எல்லா புகழும் அந்த மனிதனுக்கே….
இனி தகப்பனின் கண் பார்வையில் படாமல் இருப்பதே நல்லது என நினைத்து தூரமாக விலகி விடுகிறான்….
புகழும் செல்வமும் இருப்பது நல்லது.
ஆனால் அதை கட்டுக்குள் வைக்க தகப்பனின் அதிகாரம் தேவை. அதை மீறும்போது துன்மார்க்கம் தானாகவே வரும். துன்மார்க்கத்தால் ஆஸ்தியும் எல்லா புகழும் அழிந்து போகும்….
இது வரை நடந்த எந்த நிகழ்வுக்கும் தகப்பன் காரணமல்ல..
சிலர் கேட்பதுபோல… ஏன் இந்த உலகத்திலே கெட்டது நடக்கிறது. கடவுள் சகலவற்றையும் நல்லதாகவே வைக்கலாமே.. என கேட்பதை காண்கிறோம். மனிதனை கர்த்தர் தமது சாயலாக படைத்தார்.
அதாவது சுய சித்தம் உள்ளவனான.
வலப்புறமோ இடப்புறமோ எந்தபக்கம் செல்வது என தீர்மானிப்பது மனித உரிமையாகும்.
இளைய குமாரன் ஆஸ்தியை கேட்டது தவறல்ல.
தான் அதை உபயோகித்து லாபமடைய தகப்பனின் ஆலோசனையை கேட்டிருப்பான் என்றால் தூர தேசம் சென்றிருக்க மாட்டான்.
துன்மார்க்கமாய் வாழ்க்கை மாறியிராது
அவனது ஆஸ்தி அழிந்திருக்காது.
ஆஸ்தியை அழித்துப் போட்டவர்கள் நீங்களோ நானோ என்றால் சற்று சிந்திப்போம்
..தற்போதய நிலை ஏற்பட காரணம் கர்த்தரா ? அல்லது நாமா.?
யோபுவைப்போல சகலமும் இழந்து நிற்பீர்கள் என்றால் பல மடங்காக நிச்சயம் கர்த்தர் திரும்ப தருவார். பொறுமையுடன் காத்திருங்கள்.
நீங்கள் கர்த்தரின் பார்வையில்தான் இருக்கிறீர்கள்.
உங்கள் சுயசித்ததில் அழிந்திருக்கிறீர்கள் எனின் இனி என்ன செய்ய வேண்டும் என யோசிப்பது நல்லது..
14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,
செல்வம் இருக்கும் ஒருவனுக்கு தேசத்தின் பஞ்சம் அவனை தாக்காது…
.
இஸ்ரேல் ஜனங்கள் வனாந்தரத்தில் நடந்தாலும் அவர்கள் களைப்படையவில்லை. பசியாக இருந்ததில்லை.
தகத்துக்கு தண்ணீர் கற்பாரையில் இருந்து வரவழைக்கும் வல்ல தேவன் அவர்களோடு இருந்தார்..
தற்காலத்தில் கூட கொரோணோ வியாதி ஏற்பட்ட கொடிய காலத்தில் மூன்று வருடத்தில் நான் அனுதினமும் ஆராதிக்கும் தேவன் எப்பேர் பட்ட வல்லமையுடையவர் என்பதை எனக்கு காண்பித்தார்.
மாத வருமானமோ ஓய்வூதியமோ இல்லாத என்னைப்போல லட்சக்கணக்கான கர்த்தரின் பிள்ளைகளை அவர்கள் முகம் வாடாமல் பாது காத்த அற்புத தேவன் அல்லவா அவர்.
இந்த இளைய மகன் வாழ்க்கையில் அவன் நம்பிய செல்வங்கள் செலவான பின் “அந்த தேசத்தில்” அதாவது அவன் தங்கியிருந்த தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று.. கவனியுங்கள். இது தகப்பனின் தேசம் அல்ல..
தகப்பனின் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டால் தகப்பனின் செல்வாக்கு அரணாக நின்று அவனை பாதுகாக்கும்.
இங்கு எல்லாமே தலைகீழாக இருக்கிறது..
15. அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
ஒரு விசுவாசி பாதை மாறும்போது சகலமும் அவனுக்கு எதிராக மாறுகிறது. அரவணைப்பு என்பது அவனுக்கு யாரிடம் கிடைத்தது என்று பாருங்கள்..
பஞ்ச தேசத்தின் குடியானவன்….அவன் பன்றிகளுக்கு உரிமையாளன்…அவனோடு.ஒட்டிக் கொண்டான்..அல்லது ஒண்டிக் கொண்டான்…
தேசத்தில் கடைநிலையில் உள்ள ஒருவனிடம் கொண்டு போய் வாழ்க்கை அவனை சேர்க்கிறது…. கொடுமை..
தகப்பனின் அரவணைப்பில் கடின உழைப்பில்லாமல் வசதியாக வாழ்ந்த பிள்ளை.
அந்த வசதி பலரின் கண்களை உறுத்தி இருக்கும்..
ஆஹா..அரச வாழ்க்கை. நான் நேற்று எழுதியது போல “ ராயல் லைப்”
அன்பான விசுவாசிகளே ஊழியர்களே சற்று சிந்தியுங்கள் உங்கள் வாழ்க்கை தரம் உங்கள் திறமையினால் அல்ல .
அது உங்கள் தகப்பனின் வல்லமையினால்..கவனமாக வாழுங்கள் அது நிலைக்கும்….
சுய முயற்சியினால் தகப்பனை பிரிந்து வரங்களை மட்டும் நம்பி நீங்கள் எடுக்கும் முய்ற்சிகள் அத்தனையும் பஞ்சத்தால் அடிபட்டு அழிந்து ..ஒண்டிக் கொள்ள இடமில்லாமல் போகும்..
கர்த்தரின் அரவனைப்பை இழந்த ஒருவன் பன்றி மேய்க்கும் வேலையை செய்யக் கூட தகுதி இல்லாதவனாக வாழ்க்கை மாற்றும்….
பன்றி மேய்த்தாலும் அதற்கு கூலி இல்லை…..பன்றி மேய்ப்பது அந்த தேசத்தின் குடியானவனோடு தங்குவதற்கு மட்டுமே..கூலிக்காக அல்ல
எல்லா நேரமும் நான் யார் ?.எனக்கு உண்மையான தகுதி என்னவென்ற சிந்தனை எனக்குள் ஓடுகிறது..
இதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இப்படிப்பட்ட சிந்தனைகள் என்னை என் தகப்பனிடம் இன்னும் அதிகமாக ஒட்டிக் கொள்ளச் செய்யும்.
-------------------------------------------------------------
16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
பன்றிகளுக்கு தவிடு வைக்கும் போது இளைய மகனுக்கு அதை பர்ர்க்கும் உரிமை கூட அவனுக்கு இல்லை. பன்றிகளின் பசியை நினைக்க ஆட்கள் உண்டு.இந்த மகனுக்கோ அதுவும் இல்லை.இந்த நிலையில் அவன் புத்தி தெளிந்தது..
இதைப்போல் கடையாந்திர நிலையில் இருப்பவர்களும் இந்த நிலைக்கு நானும் ஆளாகிவிடக் கூடாது என நினைப்பவர்களும் இனி உள்ள வசனங்களை ஆர்வமாக கவனியுங்கள்.
17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
புத்தி தெளிந்ததின் வெளிப்பாடு..
தன் தகப்பனை நினைக்கிறான்…
எல்லா பிரச்சணைக்கும் முடிவு கர்;த்தரிடம் மட்டுமே உண்டு..
கர்த்தரின் வல்லமையை உணர அவரின் ஊழியர்களுக்கு அவர் செய்த நன்மைகளை எண்ணுங்கள்.
வாக்கு மாறாத தேவன் நமக்கு இன்னும் அதிகமாக நன்மை செய்வது அதிக நிச்சயமாக இருக்கிறது.
வேதத்தின் அறுபத்தி ஆறு புத்தகங்களும் இதையே நமக்கு போதிக்கிறது.
தகப்பனின் வீட்டில் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது,உயிர் வாழ்வது கடினம் அல்ல.
அது சாதாரணமாக நடைபெறும் ஒன்று..பாதுகாப்பான வாழ்க்கை உண்டு..எனது குறைவு அங்கு நிறைவாக்கப்படும் என்ற நம்பிக்கை..
--------------------------------------------------------------------------------------------------------
18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
இந்த வசனத்தில் இரண்டு காரியங்கள் கூறப்பட்டிருக்கிறது.உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்.அது என்ன.?
தகப்பனை மதிக்காமல் பேசியது.
பரத்துக்கு விரோதமாக பாவம் செய்தது….அது துன்மாக்கமாக வாழ்வை மாற்றியது..
இரண்டு காரியங்களின் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஒன்று வார்த்தையால் மன்னிப்பு கேட்பது.
இரண்டாவது துன்மார்க்த்தை விட்டு வாழ்வை மாற்றிக் கொள்வது. இரண்டையும் செய்யும்போது. தானாகவே தகப்பனிடம் நமது கால்கள் நம்மை கொண்டு வந்து சேர்க்கும்..
20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
நமது குறைவுகள் நிறைவாகும் நாளுக்காக கர்த்தர் ஆவலாக இருக்கிறார்.இது விசுவாசிகளுக்கான ஒரு ஆலோசனையாகும்…
கர்த்தர் நமக்கு கொடுத்த பாதுகாப்பான வாழ்க்கையில் இருக்கும்போது இளைய குமாரனைப்போல கொழுப்பான சிந்தனைகள் இதயத்தில் பிறக்க வாய்ப்பு அதிகம்.
விசுவாசியாக இருந்தாலும் ஊழியராக இருந்தாலும் இரண்டு பேருக்கும் இது பொறுந்தும்
இதில் நானும் அடக்கம்….பல நாள் இதயத்தில் இருந்ததை இறக்கி வைத்த நிம்மதி எனக்கு இப்போது இருக்கிறது..
கர்த்தரால் எனக்குள் ஏவப்பட்டதை எழுதுகிறேன்….இன்னும் கூட சில காரியங்கள் இருக்கிறது…உண்மையை செல்லப்போனால் தயக்கமாக இருக்கிறது.
.பர்க்கலாம் ...பிறர் மனம் நோகாமல் இடித்துரைக்கும் கலையை இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
காலங்கள் பதில் சொல்லும்..